Don't Miss!
- News மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்ஷன்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
முதல்வர் தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்... பரபரப்பை ஏற்படுத்தும் நடன இயக்குநர்
சென்னை: 'தமிழக முதல்வர்தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று நடன இயக்குநர் சிவசங்கர் தெரிவித்திருப்பது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடா திருடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட 1௦௦௦ க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துப் புகழ்பெற்றவர் சிவசங்கர்.
சிவசங்கர் மீது அவரது மூத்த மருமகள் ஜோதி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
திருமணம்
இந்நிலையில் சிவசங்கர் இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் '' சினிமா துறையின் உச்சத்தில் இருக்கிற என்மீது எனது மருமகள் ஜோதி புகார் அளித்திருக்கிறார்.2013ம் ஆண்டு எனது மகன் விஜய் கிருஷ்ணா- ஜோதி இருவருக்கும் திருமணம் நடந்தது. ஜோதி குடும்பத்தாரிடம் வரதட்சணை எதுவும் நான் கேட்கவில்லை.
தலைமறைவு
திருமணம் முடிந்ததும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தோம்.ஆனால் அங்கும் சண்டை வந்ததால் எனது மகன் ஜோதியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி வீட்டுக்கு வந்துவிட்டான்.ஜோதியும் என் மகனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிவிட்டார். தற்போது திடீரென ஜோதி எனது வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்கிறார். இவரின் பொய் புகார்கள் காரணமாக நாங்கள் குடும்பத்துடன் சிலநாட்கள் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று.
10 கோடி
எனது மகன் ஜோதியுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறான். ஆனால் ஜோதியும் அவரது குடும்பத்தாரும் எங்களிடமிருந்து 10 கோடி பணமும், எங்களின் சொந்த வீட்டையும் கேட்டு மிரட்டுகிறார்கள்.
முதல்வர்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்.இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கூறியிருக்கிறார்.