twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உருப்படுமா இந்நாடு? - கவிஞர் யுகபாரதி

    By Shankar
    |

    ஏய்ப்பவர்கள் நிற்கவேண்டிய
    எல்லா வரிசையிலும்
    ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா
    சோத்துக்கில்லாதவனிடம்
    சொல்லாமல் வசூலிக்கிறது
    கருப்புப்பணத்தை

    பித்தலாட்ட பெரும்புள்ளிகள்
    கட்டாத பணத்தையெல்லாம்
    வட்டியோடு வாங்கப்பார்க்கிறது
    பஞ்சப் பராரிகளிடம்

    Poet Yugabharathi on Demonitisation

    அதிக அதிகமாய்ச்
    சொத்து சேர்த்தவர்களை
    ஆட்சியிலே அமர்த்திவிட்டு
    அன்னாடங் காய்ச்சிகளிடம்
    ஆரம்பிக்கிறது விசாரணையை

    கோடியிலே கொழுத்தவர்கள்
    கொண்டுபோன மானத்தை
    தேடிக்கொண்டிருக்கிறது
    தேய்ந்தனின் கோவணத்தில்

    ஓட்டுக்கு மை வைத்தே
    ஒன்றும் நடக்கவில்லை. அதற்குள்
    நோட்டுக்கு மை வைக்க
    நுழைகிறது நடவடிக்கை

    பத்துக்கு நூறாக
    பணமுதலைப் பெருத்திருக்க
    ஒப்புக்குக் கணக்கெழுதி
    உருப்படுமா இந்நாடு?

    ஒண்ணுக்கு வந்தால்கூட
    ஒதுங்கவும் வழியில்லாத
    வங்கிகளை வைத்துக்கொண்டு
    எண்ணம் பலிக்குமென்று
    எத்தனைநாள் பேசுவது?

    ரூபாயில் சிரிக்கிறார் காந்தி
    சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
    மக்கள்!

    English summary
    Poet Yugabharathi's poem on PM Modi's demonitisation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X