Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உருப்படுமா இந்நாடு? - கவிஞர் யுகபாரதி
ஏய்ப்பவர்கள் நிற்கவேண்டிய
எல்லா வரிசையிலும்
ஏழைகளை நிறுத்துகிற ஏக இந்தியா
சோத்துக்கில்லாதவனிடம்
சொல்லாமல் வசூலிக்கிறது
கருப்புப்பணத்தை
பித்தலாட்ட பெரும்புள்ளிகள்
கட்டாத பணத்தையெல்லாம்
வட்டியோடு வாங்கப்பார்க்கிறது
பஞ்சப் பராரிகளிடம்
அதிக அதிகமாய்ச்
சொத்து சேர்த்தவர்களை
ஆட்சியிலே அமர்த்திவிட்டு
அன்னாடங் காய்ச்சிகளிடம்
ஆரம்பிக்கிறது விசாரணையை
கோடியிலே கொழுத்தவர்கள்
கொண்டுபோன மானத்தை
தேடிக்கொண்டிருக்கிறது
தேய்ந்தனின் கோவணத்தில்
ஓட்டுக்கு மை வைத்தே
ஒன்றும் நடக்கவில்லை. அதற்குள்
நோட்டுக்கு மை வைக்க
நுழைகிறது நடவடிக்கை
பத்துக்கு நூறாக
பணமுதலைப் பெருத்திருக்க
ஒப்புக்குக் கணக்கெழுதி
உருப்படுமா இந்நாடு?
ஒண்ணுக்கு வந்தால்கூட
ஒதுங்கவும் வழியில்லாத
வங்கிகளை வைத்துக்கொண்டு
எண்ணம் பலிக்குமென்று
எத்தனைநாள் பேசுவது?
ரூபாயில் சிரிக்கிறார் காந்தி
சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
மக்கள்!