Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திருட்டு "காக்கிச் சட்டை"யை கையும் களவுமாக பிடித்த கரூர் போலீஸ்!
கரூர்: கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.
கரூர் நகரில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம்புது திரைப்படங்கள் திருட்டு வி.சி.டியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.
அப்போது, புதுப்பட சி.டிகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதில் எனக்குள் ஒருவன், அனேகன், காக்கிசட்டை, வெள்ளைக்காரத்துரை, கதம் கதம், டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் சிக்கின.
மேலும் இதை விற்பனை செய்த கரூர் பாரதியார் தெருவில் வசிக்கும் முருகன் (எ) கார்த்திக் (வயது 30), பெரியார் நகர் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 32), செல்லாண்டிபாளையம் பகுதியை சார்ந்த திருமூர்த்தி (வயது 29), ஆகிய 3 பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 200 புதுப்பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டது,