Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்தக் "கருமத்தை" என்னாலேயே சகிச்சுக்க முடியலையே... "பவர்" ஸ்டார் பலே புலம்பல்!
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு உண்மையிலேயே தைரியம் அதிகம்தான். இல்லாவிட்டால் தான் நடித்த, தயாரித்த படங்கள் குறித்து அவரே கடுமையாக விமர்சிப்பாரா..
ஒரு நேரத்தில் ஓஹோவென்று கோலிவுட்டைக் கலக்கி வந்தவர் பவர்ஸ்டார். எல்லாமே பில்டப்புதான் என்றாலும் கூட தன்னை வைத்து நடந்த கேலிக் கூத்துக்களையும், விமர்சனங்களையுமே வைத்து பிரபலமானவர் பவர் ஸ்டார்.
தன்னைக் கேலி செய்வோருக்கு விழா எடுத்துக் கொண்டாடும் அளவுக்கு அப்போது படு ஜாலி மூடில் இருந்தவர் பவர் ஸ்டார். அவரே வலியக்கப் போய் பட விழாக்களை கலகலப்பாக்கினார். கல்லூரி விழாக்களுக்குப் போனார். அவரே காசு பணத்தை செலவு செய்து விழாக்களை நடத்தினார்.
பண மோசடியில் சிக்கி
ஆனால் ஒரு நல்ல நாளில் அவர் பண மோசடியில் சிக்கி சிறைக்குப் போனபோதுதான் பவர் ஸ்டாரின் உச்சம் சரியத் தொடங்கியது.
சிறைக்குள் சிக்கிய கலர் கண்ணாடி
பளிச்சென இருக்கும் பவர் ஸ்டார் சிறைக்குள் சில வாரங்களைக் கழித்து விட்டு வெளியே வந்தபோது அவரே அவருக்காக உருவாக்கி வைத்திருந்த சாம்ராஜ்யத்தைக் காணோம்.
எல்லாம் போச்சு
இப்போதுதான் பவர் ஸ்டாரின் முடியே இல்லாத தலையில் ஞானம் பிறந்துள்ளது. தனது படங்களை தன்னாலேயே பார்க்க முடியவில்லை, சகிக்கவில்லை. இதையெல்லாம் எப்படித்தான் மக்கள் பார்ப்பார்களோ என்று உண்மையாக பேசுகிறாராம்
ஆனந்தத் தொல்லை மட்டும்
தான் நடித்து வந்த அத்தனை படங்களையும் தூக்கிப் போட்டு விட்டாராம். அதேசமயம், ஆனந்தத் தொல்லை படத்தை மட்டும் எப்படியாவது ரிலீஸ் செய்யப் போகிறாராம்.
அந்தத் தொல்லையோடு எல்லாத் தொல்லையும் ஒழியட்டும்.. !