Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரே நேரத்தில் 10-15 வகை பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுவார் பிரபாஸ்: ராஜமவுலி
லண்டன்: டயட்டில் இல்லாத நாளில் பிரபாஸ் 15 வகை பிரியாணியை சாப்பிடத்தாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். இந்த படங்களுக்காக அவர் தனது வீட்டில் ஜிம் வைத்து உடலை கும்மென்று ஆக்கினார்.
படத்திற்காக அவர் வெயிட் போட்டார். இந்நிலையில் பிரபாஸ் பற்றி ராஜமவுலி லண்டன் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது,
டயட்
பாகுபலி படத்திற்காக பிரபாஸ் டயட்டில் இருந்தார். மாதம் ஒரு நாள் சீட் மீல் டே அதாவது டயட் கிடையாது. அன்று மட்டும் பிரபாஸ் சாப்பிடும் சாப்பாட்டை பார்க்க வேண்டுமே.
பிரியாணி
பிரபாஸ் 10 முதல் 15 வகை பிரியாணி சாப்பிடுவார். வெறும் பிரியாணி. நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அத்தனை வகை பிரியாணி இருப்பது கூட நமக்கு எல்லாம் தெரியாது.
மீன்
வகை வகையான மீன்கள், சிக்கின், மட்டன் என்று வெலுத்துக் கட்டுவார் பிரபாஸ். அவர் சாப்பிடும் வகைகளை உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சட்னி
தன் கண் முன்பு அத்தனை வகையான உணவு இருந்தாலும் சட்னி இல்லாமல் சாப்பிட மாட்டார். ஒரு நாள் இரவு 2 மணி வரை கால்பந்து விளையாடினோம். விளையாடி முடிந்த பிறகு சாப்பிட போனார் பிரபாஸ்.
மச்சான்
சாப்பாட்டை பார்த்த பிரபாஸ் தனது மச்சானிடம் சட்னி கேட்டார். அவர் வீட்டிற்கு சென்று தூங்கிய தனது மனைவியை எழுப்பி சட்னி செய்யச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். சட்னியை சாப்பிட்ட பிறகே பிற வகை உணவை சாப்பிட்டார் என்றார் ராஜமவுலி.