Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜமவுலியை வைத்துக் கொண்டே 'அந்த' உண்மையை சொன்ன 'பாகுபலி' பிரபாஸ்
சென்னை: நான் முன்பு ராஜமவுலியின் ரசிகன் கிடையாது என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ பிரபாஸ் கூறுகையில்,
ராஜமவுலி
ராஜமவுலிகாரு படம் குறித்து தொடர்ந்து 9 மணிநேரம் பேசுவார். அந்த அளவுக்கு அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். போர்க்கால படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு.
பாகுபலி
போர்க்கால படத்தில் நடிக்க ஆசைப்பட்டபோது ராஜமவுலி பாகுபலி படத்தில் நடிக்க கேட்டார். உடனே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அனுபவம்
பாகுபலி பார்ட் 1 மற்றும் 2ல் நடித்த அனுபவம் சிறப்பானது. படப்பிடிப்பு நடந்தபோதே எங்களுக்கு புல்லரிக்கும் அனுபவம் கிடைத்தது. படத்தை பார்க்கும்போது உங்களால் அதை உணர முடியும்.
ரசிகன்
ராஜமவுலியுடன் பேசும்போது எல்லாம் நான் வேறு ஆளக மாறிவிடுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் முன்பு ராஜமவுலியின் ரசிகன் கிடையாது. ஆனால் பாகுபலிக்கு பிறகு நான் அவரின் ரசிகனாகிவிட்டேன் என்றார் பிரபாஸ்.