Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜூனியர் என்டிஆர் விபத்துக்குள்ளான அதே இடத்தில்... விபத்தில் சிக்கிய நடிகை ப்ரணிதா!
ஹைதராபாத்: சகுனி, மாஸ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ப்ரணிதா நேற்று காலை விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தமிழில் சகுனி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் நேற்று காலை காரில் தனது தாயாருடன் ஹைதராபாத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ப்ரணிதா வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு கீழிறங்கி பெரும் விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் ப்ரணிதா மற்றும் அவருடன் உடன் வந்தவர்கள் பெரிய காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.
While on our way back from kammam. perfectly fine but unable to come out of the shock pic.twitter.com/b7TXWnULgz
— Pranitha Subhash (@pranitasubhash) February 14, 2016
மேலும் இந்த விபத்தில் நடிகை ப்ரணிதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனைப் பார்த்த சிலர் ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.
All of us are perfectly alright. travelling in the bouncers' mini bus now. nothing to worry pic.twitter.com/kQoXYOqvCU
— Pranitha Subhash (@pranitasubhash) February 14, 2016
சிகிச்சைக்குப் பின்னர் வேறு ஒரு காரில் ப்ரணிதா ஹைதராபாத் சென்றார். இது குறித்து பிரணிதா "அந்த இடத்தில் ஆம்புலன்ஸை அழைத்தவர்களுக்கு நன்றி.
எல்லோருமே பாதுகாப்புடன் இருக்கிறோம். ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து விட்டு காரில் திரும்பியபோது, இதே இடத்தில்தான் விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.
சொல்லி வைத்தது போல அதே இடத்தில் தற்போது ப்ரணிதாவும் விபத்தில் சிக்கியிருப்பது டோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இச்சம்பவத்தை அறிந்த திரை நட்சத்திரங்கள் பலரும் ப்ரணிதாவைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.