Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
3 முறை தற்கொலைக்கு முயற்சித்தார் பிரியங்கா சோப்ரா.. குண்டைப் போடும் மாஜி மேனேஜர்!
மும்பை: மன அழுத்தத்தால் 2,3 முறை தற்கொலைக்கு முயன்ற பிரியங்கா சோப்ராவை தான் காப்பற்றியதாக, பிரியங்காவின் முன்னாள் மேனேஜர் பிரகாஷ் ஜாஜூ தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவின் சார்பில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார்.
பிரியங்கா சோப்ரா
'குவான்டிகோ' தொலைக்காட்சித் தொடரின் மூலம் கடந்த ஆண்டு ஹாலிவுட் சென்று புகழ்பெற்றவர் பிரியங்கா சோப்ரா.மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் வெற்றி நடிகையாக பிரியங்கா தற்போது வலம்வருகிறார்.
|
பிரகாஷ் ஜாஜூ
இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக நிறையமுறை தற்கொலை செய்ய முயன்ற பிரியங்காவை தான் காப்பாற்றியதாக அவரது முன்னாள் மேனேஜர் பிரகாஷ் ஜாஜூ தெரிவித்திருக்கிறார். மன அழுத்தம் காரணமாக நடிக, நடிகையர் தற்கொலை செய்துகொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரகாஷின் கருத்து பாலிவுட் உலகில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறைக்கு
பிரியங்காவிற்கு தப்பான மெசேஜ்களை அனுப்பியதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் ஜாஜூ 67 நாட்களை ஜெயிலில் கழிக்கும் படி நேர்ந்தது. இந்நிலையில் பிரியங்கா குறித்த சில விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரகாஷ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
67 நாட்கள்
பிரகாஷ் ஜாஜூவின் சிறை அனுபவங்களை வைத்து '67 நாட்கள்' என்ற படத்தை எடுக்கப்போவதாக, பிரியங்காவின் முன்னாள் காதலர் அஸீம் மெர்ச்சன்ட் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னுடைய சார்பில் வக்கீல் நோட்டிஸ் ஒன்றை பிரியங்கா,அஸீமிற்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில் இப்படம் விரைவில் உருவாகும் என்று பிரகாஷ் ஜாசு தற்போது தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ் ஜாஜுவின் இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.