Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விவசாயிகளுக்கான பந்த்... தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு... நோ ஷூட்டிங்!
சென்னை: விவசாயிகளின் நலன் காக்க வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பங்களை அரவணைக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஆதரவுகரம் நீட்டவேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 25.04.2017-அன்று அனைத்து கட்சிகளின் சார்பாகவும், அறிவித்துள்ள அறப்போராட்டத்திற்கு எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த கலையுலகினர் சார்பாகவும் ஆதரவை தெரிவிக்கிறது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டுமே இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.