Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
படங்களை வெளியிடுவதில் தடை இல்லை: பின்வாங்கியது தயாரிப்பாளர்கள் சங்கம்
அக்டோபர் 23-ம் தேதியிலிருந்து புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று சில வாரங்களுக்கு முன் தாணு தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றினர்.
பெரும்பான்மை தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொள்ளாததால், இப்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று இரவு வெளியான அறிக்கை இது:
நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23.10.2015 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்ப பெறக்கோரி கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23.10.2015 முதல் எந்தமொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் அனைத்து பிரிவினரையும் கலந்து பேசி மறு தேதி அறிவிக்கப்படும். நமது சங்க உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்".