Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வேதாளம் கன்னட ரீமேக் ரிலீஸ் எப்போது?
சென்னை: அஜித்தின் பிளாக் பஸ்டர் மூவிகளில் ஒன்றான வேதாளம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் . படம் இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் ரீலீஸ் செய்யப்பட உள்ளது.
சென்ற ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் என புகழப்பட்ட திரைப்படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் தீபாவளிக்கு திரை கண்ட திரைப்படம் வேதாளம். தமிழ் சினிமா வரலாற்றில், முதல் நாள் வசூலில் புது சாதனை படைத்து ரூ.15.5 கோடியை வசூலித்து அசத்தியது.
100 கோடி ரூபாய் கிளப்பிலும், வேதாளம் சேர்ந்துவிட்டது. சினிமா விமர்சகர்கள், இது வழக்கமான மசாலா கதை என இடித்துரைத்தாலும், மழைக்கு நடுவேயும், ரசிகர்கள் வரவேற்பை பெற்று படம் ஹிட் அடித்தது.
புனித் ராஜ்குமார் கைவசம் தற்போது 2 படங்கள் இருப்பதால், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவின் நகர்ப்பகுதிகளில் வேதாளம் நேரடி தமிழ்படமாகவே பல கன்னட ரசிகர்களால் கண்டுகழிக்கப்பட்டுள்ளது. எனவே ஓராண்டு கழித்து ரீமேக் படத்தை ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று ராஜ்குமாரின் மகனும், படத்தின் ஹீரோவுமான புனித் ராஜ்குமார் கருதுகிறாராம். தனக்குரிய மாஸ் கதாப்பாத்திரத்திற்கு வேதாளம் கதை ஒத்துப்போகும் என்பது புனித்தின் விருப்பத்திற்கு காரணமாம்.