Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தர்மபுரி கலவரமா 'கௌரவம்'? - ராதா மோகன் விளக்கம்
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சிரிஷ், யாமி குப்தா நடிக்கும் படம் கௌரவம். ராதா மோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதை, தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்துக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை என்ற சாதிக் கட்சியின் தலைவரான பொங்கலூர் ரா.மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணத்துக்கு எதிராக கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் வன்முறைகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "கௌரவம் படத்தை தர்மபுரி கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே காட்டத் தயார்," என்றார்.