Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஷாலை கழுவிக் கழுவி ஊத்திய ராதாரவியா இப்போ இப்படி சொல்வது?: வியக்கும் கோலிவுட்
சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை அண்ணாநகரில் இருக்கும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
ரஜினி, கமல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் ஆகியோர் வாக்களித்தனர். நடிகர் ராதாரவியும் வாக்களித்தார். வாக்களித்த பிறகு ராதாரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விஷால்
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சங்கத்திற்கு நன்மை செய்ய வேண்டும். தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று ராதாரவி செய்தியாளர்களிடம் கூறினார். இது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ராதாரவி
நடிகர் சங்க தேர்தலின்போது ராதாரவி விஷாலை கடுமையாக விமர்சித்தார். விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது. அவருக்கு அனுபவம் இல்லை என்று எல்லாம் விமர்சித்தார்.
விமர்சனம்
நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், ராதாரவியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் ராதாரவியின் மனமாற்றம் பலரையும் வியக்க வைத்துள்ளது.