Don't Miss!
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்ப போராட்டம்தான் முக்கியம்... அப்றமா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன்! - மெரீனா திரும்பிய லாரன்ஸ்
சென்னை: மெரீனாவில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராகவா லாரன்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அவர் நேராக மெரீனாவுக்கே திரும்பி போராட்டக் குழுவுடன் இணைந்து கொண்டார்.
மருத்துவர்கள் அவரை ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால், "இது முக்கியமான கட்டம்... வரலாற்று நிகழ்வு. போராட்ட களத்தில் நானும் இருந்தே ஆக வேண்டும். அந்த மக்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய நான் நேரில் இருந்தாக வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்," என்று கூறிவிட்டு மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார்.
திரும்பி வந்த ராகவா லாரன்ஸை மாணவர்கள் வரவேற்று நலம் விசாரித்தனர்.
மெரீனா ஜல்லிக்கட்டு போராளிகள் எந்த நடிகர் நடிகைகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ராகவா லாரன்ஸ், ஆர் ஜே பாலாஜி போன்ற வெகு சிலரை மட்டுமே போராட்டக் களத்துக்குள் அனுமதித்துள்ளனர்.