Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெரிய இயக்குனர் என்ற ஈகோவே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனிடம் 2 முறை மன்னிப்பு கேட்ட ராஜமவுலி
சென்னை: பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராஜமவுலி நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், ராணா அம்மா கதாபாத்திரமான சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். வழக்கம் போல் தனது நடிப்பால் அவர் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார்.
சிவகாமி
சிவகாமி கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது என்பதால் ராஜமவுலி முதலில் வேறு நடிகையை தேடியுள்ளார். அப்போது அவர் லட்சுமி மஞ்சுவை அணுகி சிவகாமியாக நடிக்குமாறு கேட்டுள்ளார்.
லட்சமி மஞ்சு
பிரபாஸ், ராணாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு தனக்கு வயதாகவில்லை என்று கூறி லட்சுமி மஞ்சு பாகுபலி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
ரம்யா கிருஷ்ணன்
லட்சுமி மஞ்சு நடிக்க மறுத்த பிறகே ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளார். முதலிலேயே ரம்யா கிருஷ்ணனை அணுகாததற்காக ஹைதராபாத்தில் நடந்த பாகுபலி 2 தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழாவில் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் மேடையில் மன்னிப்பு கேட்டார்.
ராஜமவுலி
பாகுபலி 2 தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியிலும் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.