Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாகுபலி... முதல் பாகம் தமன்னாவுக்கு, அடுத்த பாகம் அனுஷ்காவுக்கு!- ராஜமவுலி
இரண்டு பாகங்களாக வரவிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவமும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளதாக இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி தெரிவித்தார்.
நான் ஈ' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி'. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர்களால பார்க்கப்பட்டு வருகிறது.
இரு பாகங்கள்
படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீட்டுக்காக சென்னை வந்துள்ள இயக்குநர் ராஜமவுலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகுபலி படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.
நேரடி தமிழ்ப் படம்
அதன் 2ஆம் பாகம் 35 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படமல்ல. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கினோம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம்
இப்படத்தில் ஹீரோவை விட ஹீரோயினுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். முதல் பாகத்தில் தமன்னா கதாநாயகியாக வருகிறார். அனுஷ்கா முதல் பாகத்தில் கொஞ்ச நேரம்தான் வந்து செல்வார்.
அனுஷ்கா - தமன்னா
இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கதாநாயகியாகவும் தமன்னா சிறிதளவு வந்து செல்லும்படியாகவும் கதையமைத்திருக்கிறேன். இவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பவர்புல்லாக இருக்கும்.
சத்யராஜ்
இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இவருடைய ஒத்துழைப்பு படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
4 மொழிகளில்
இப்படத்தை உலகமெங்கும் ஜூலை 10ம் தேதி வெளியிட உள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது," என்றார்.