Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவனா?.. கேட்கிறார் ராஜமௌலி
ஹைதராபாத்: நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வாங்கும் அளவிற்கு நான் தகுதியானவனா? என்று இயக்குநர் ராஜமௌலி கேள்வி கேட்டிருக்கிறார்.
நேற்று மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருது வாங்குவோர் பட்டியலில் இயக்குநர் ராஜமௌலியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பாகுபலி படத்தின் உழைப்பைப் பாராட்டி இந்த விருது அவருக்கு அளிக்கப்படவிருக்கிறது.
I dont know what to say.
It is quite a mixed feeling.
Very frankly i don't feel I deserve the honour.
This is not humility.
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2016
இந்நிலையில் இது குறித்து ராஜமௌலி "இந்த விருது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது எனக்கு கலவையான உணர்வுகளை அளிக்கிறது.
உண்மையைச் சொன்னால் இந்த விருதிற்கு நான் தகுதியானவன் கிடையாது. நான் இப்படி சொல்வதால் இதனைப் பணிவு என்று எண்ணி விடாதீர்கள்.
Awarding Ramoji rao garu and Rajanikanth garu with Padma Vibhushan is so apt. Their work created a lasting impression that will reflect
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2016
ரஜினிகாந்த் மற்றும் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்ததில் அர்த்தம் இருக்கிறது. அவர்களின் நீண்டநாள் உழைப்பு தற்போது பிரதிபலித்துள்ளது.
But cant deny that it also makes me so happy and proud to be with them.
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2016
அதே நேரம் இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமையையும் எனக்கு ஒருசேர அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
ராஜமௌலியின் இந்த கேள்வி திரையுலகிலகினர் மத்தியில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜமௌலி தற்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.