Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், தனுஷும் பார்க்க மாட்டார்களாம்!
சென்னை: ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடப் போவதை தந்தை ரஜினியும், கணவர் தனுஷும் நேரில் பார்க்கப் போவது இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஒரு பரதநாட்டிய கலைஞர். ஐ.நா. சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதுவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.
ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், தனுஷும் நேரில் பார்க்கப் போவது இல்லையாம்.
ரஜினியும், தனுஷும் தங்களின் படங்களில் பிசியாக இருப்பதால் ஐஸ்வர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்களாம்.