Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சங்கரன்கோவிலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது. ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் அதிமுக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் நெல்லை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பானுசேகர், நிர்வாகிகள் குணசேகர பாண்டியன், சூர்யா கணேசன், சங்கரன்கோவில் குணா, வீரபுத்திரன், கண்ணதாசன், மேலநீலிதநல்லூர் ஆப்பிள் தங்கமணி, மாரிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக வேட்பாளரான முத்துசெல்விக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக சூறாவளிப் பிரச்சாரம் செய்யப்போவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முத்துசெல்விக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.