Don't Miss!
- Finance ரேஷன் கார்டு இல்லாமலே.. ரேஷனில் விற்கும் பொருட்களை வாங்கலாம்.. எப்படி? இதை நோட் பண்ணுங்க
- News முதல்வருக்கு ஜிஎஸ்டி குறித்து சவால் விட்ட சரத்குமார்.. ராதிகா வேட்புமனுவை வைத்தே.. திமுக தந்த பதிலடி
- Technology ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Lifestyle இந்திய வரலாற்றை சுமந்து நிற்கும் பழமையான 8 நகரங்கள்...இதில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு நகரம் எது தெரியுமா?
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
சென்னை: ரஜினியின் புகழ் பற்றி தெரிந்தும் பா. ரஞ்சித் ஒரு விஷயத்தில் அடம்பிடித்துள்ளார்.
கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை இது.
முன்னதாக ஹாஜி மஸ்தான் கதை என்று கூறப்பட்டதால் அவரின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை
மும்பை பின்னணி சரி, ஆனால் ரஜினி அங்கு சென்றால் அவரை அனைவருக்கும் அடையாளம் தெரியும். கூட்டம் கூடிவிடும், அவர்களை சமாளிப்பது கடினம். அதனால் செட் போட்டு எடுக்கலாமே என்று ரஞ்சித்திடம் கூறப்பட்டதாம்.
ரஞ்சித்
செட் எல்லாம் வேண்டாம், எனக்கு மும்பைக்கே போய் தான் படம் எடுக்க வேண்டும் என்று ரஞ்சித் அடம்பிடித்தாராம். இதையடுத்து செட் போடும் ஐடியா கைவிடப்பட்டதாம்.
தாராவி
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் தான் ரஜினி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அது தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமும் கூட.
ரஜினி
படப்பிடிப்புக்காக ரஞ்சித் மற்றும் படக்குழு நேற்று முன்தினமே மும்பை சென்றுவிட்டதாம். ரஜினி வரும் 28ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவர் 3 வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்புவாராம்.