Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினி பற்றி நான் 'அப்படி' சொல்லவில்லை: திரித்து எழுதுவதை கண்டிக்கிறேன்- சேரன்
சென்னை: சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை என இயக்குனர் சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த 15ம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதில் இருந்து அவர் அரசியலுக்கு வருவது பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
|
பொய்யே
#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே என சேரன் ட்வீட்டியிருந்தார்.
|
சேரன்
சில ஊடகங்கள் தனது கருத்தை மாற்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சேரன் ட்வீட்டியிருப்பதாவது, சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை.
|
ரஜினி
ரஜினிசார் நல்ல மனிதர். அரசியல் லாபங்களுக்காக அவரை வலியுறுத்தி இறக்கி ஆதாயம்தேட நினைப்பவர்களிடம் உஷார் என சொன்னேன். மக்கள் அழைத்தால் வாருங்கள் என ட்வீட்டியுள்ளார் சேரன்.
அரசியல்
அரசியல் குறித்து ரஜினியாக பேசியதால் அவரது ரசிகரக்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவார், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கூட தெரிவித்துள்ளார்.