Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எல்லா ரசிகர்களுடனும் படமெடுக்க முடியவில்லையே...! - ரஜினி வேதனை
கோலாலம்பூர்: மலேசியப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாய்லாந்து கிளம்பும் முன் ரஜினி அளித்த பேட்டியில், 'எல்லா ரசிகர்களுடனும் படமெடுத்துக் கொள்ள முடியவில்லையே' வேதனை தெரிவித்தார்.
மலேசியாவில் மொத்தம் 28 நாட்கள் கபாலி படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும் அவர் தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுடன் படமெடுத்துக் கொண்டார். பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
ரஜினியின் வேதனை
அவர் கூறுகையில், "மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னன்னா.. எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்பதுதான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
மலேசியா எப்படி மாறிடுச்சி?
மலேசியாவையும், மலேசிய மக்களையும் நான் மிகவும் விரும்புகிறேன். மலேசியா இவ்வளவு அழகாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 78-ல் (1978) ‘பிரியா' படத்திற்காக நான் மலேசியா வந்தேன். அதன்பிறகு சுமார் 37 வருடங்கள் கழித்து இப்போதுதான் மீண்டும் இங்கு வந்துள்ளேன். மலேசியா மொத்தமா மாறிடுச்சி!
மலேசியாவில் பிறந்த கபாலி
இங்கு நாங்கள் எடுத்திருக்கும் காட்சிகள் கண்டிப்பாக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த படத்தில் குறிப்பாக ‘கபாலி' என் கேரக்டர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வளரும்
இதன் பிரதிபலிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு மேலும் மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
மலேசிய அமைச்சர்
இந்த சந்திப்பின் போது ரஜினியுடன், கபாலி படக்குழுவினர் மட்டுமல்லாமல், மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீசும் உடனிருந்தார்.