Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என் பெயரை பயன்படுத்த கஸ்தூரிராஜாவுக்கு அனுமதி இல்லை! - ரஜினி
சென்னை: எந்த இடத்திலும் தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்தார்.
"மே ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி பைனான்சியர் போத்ரா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்த ரஜினி தடை உத்தரவு பெற்றுள்ளார். ஆனால், அவரது பெயரைப் பயன்படுத்தி, இயக்குநர் கஸ்தூரிராஜா என்னிடம் ரூ.65 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
ரஜினியின் சம்பந்தியே அவரது பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, இந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தையும் கேட்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரஜினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், என்னைப் பற்றி படம் தயாரித்த பட நிறுவனத்துக்கு எதிராகத்தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதற்கும், போத்ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது மனு விசாரணைக்கு உகந்தல்ல.
இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு, எனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள எந்த அதிகாரமும், வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.