Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினி - ஷங்கர் படம்!
இந்தியாவின் பிரமாண்ட படம் என்று இதுவரை பாகுபலியைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா... இதனை மிஞ்சும் பிரமாண்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகவிருக்கிறது ரஜினியும் ஷங்கரும் மூன்றாவதாக இணையுதம் புதிய படம்.
பிரமாண்ட வெற்றிப் பெற்ற எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கவிருந்தார். அது எந்திரன் 2 என்றனர். ஆனால் அந்தப் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
2016-ல்
இந்த நிலையில் 2016-ல் ரஜினி - ஷங்கர் படம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தில் ரஜினியுடன் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கப் போகிறார். விக்ரம்தான் அந்த நடிகர் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில், அவர் சர்வதேச அளவில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஜோடி
ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு தரப்படும் சம்பளம், ஆசியாவில் எந்த நடிகரும் வாங்காதது என்கிறார்கள். இயக்குநர் ஷங்கருக்கு ரூ 20 கோடி சம்பளம் என்கிறார்கள்.
சம்பளம் ரூ 100 கோடி
ரஜினி சம்பளம் தவிர்த்து, மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமே ரூ நூறு கோடியைத் தொடும் என்று கூறப்படுகிறது. மொத்த பட்ஜெட் ரூ 250 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்டம்
இதன்படி பார்த்தால் இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவில் அதிக செலவில் உருவாகும் படம் ரஜினி - ஷங்கரின் படமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
இரண்டாண்டுகள்
இந்தப் படம் முடிய இரண்டாண்டுகள் ஆகும். அதைச் சொல்லியே ஒவ்வொரு கலைஞரையும் ஒப்பந்தம் செய்கிறார்கள். 2017 அல்லது 2018-ன் ஆரம்பத்தில்தான் இந்தப் படம் ரிலீசாகும்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?