Don't Miss!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏப்ரல் 11-ம் தேதி ரசிகர்களைச் சந்திக்கிறேன்.. ஆனால் அரசியல் பேச அல்ல! - ரஜினிகாந்த்
ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு வரும் ஏப்ரல் 11-ம் தேதி ரசிகர்களை சென்னையில் சந்திக்கிறேன். ஆனால் அதில் அரசியல் நோக்கம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் ஒட்டு மொத்த மீடியாவும் போயஸ் கார்டனில் குவிந்தது.
சந்திப்பு முடிந்ததும் மீடியாக்களிடம் ரஜினி பேசினார். நீண்ட நாளைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதால், ஏராளமான கேள்விகளை அவரிடம் வைத்தனர்.
அதில் ரசிகர் சந்திப்பு குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கையில், "ஏப்ரல் 2-ம் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னை வருகிறார்கள். ஏப்ரல் 11-ம் தேதி நான் ரசிகர்களைச் சந்திக்கிறேன். என்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை நிறைவேற்ற 11-ம் தேதி சந்திக்கிறேன். அந்த சந்திப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கலந்து பேசவே ஏப்ரல் 2-ம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. அரசியல் பேசவும் நான் விரும்பவில்லை," என்றார்.