Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: காளைகளை டார்ச்சர் செய்யத் துடிக்கும் தமிழகத்தின் பெயரை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராம் கோபால் வர்மா திமிராக ட்வீட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள் என விமர்சித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏதாவது ட்வீட்டி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது போல. தமிழக மக்கள் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்காக போராடுவதை இழிவுபடுத்தி ட்வீட் போட்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டின் பெயரை ஜல்லிக்கட்டு என்று மாற்ற வேண்டும் என பீட்டா ஐ.நா.விடம் கோரிக்கை விடுக்க வேண்டும். டார்ச்சர் செய்ய துடிக்கும் மாநிலத்திற்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கலாச்சாரமற்ற மாநிலம் என பதிவு செய்ய வேண்டும்.
|
பிரபலங்கள்
தமிழகத்தின் சர்வாதிகார அரசியல்வாதிகளை பார்த்து பிரபலங்கள் பயந்து நடுங்குகிறார்கள். அப்பாவி விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதில் இருந்தே அவர்களின் கோழைத்தனம் தெரிகிறது.
|
பீட்டா
பீட்டாவை குறிவைப்பதன் மூலம் ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்பது தெரிகிறது. அவர்களின் அறிவு ஆப்பிரிக்காவில் உள்ளவர்களை விட பின்னோக்கியுள்ளது.
|
த்ரிஷா
த்ரிஷாவை தாக்கியதன் மூலம் ஜல்லிக்கட்டு விலங்குகள் தாங்கள் அடக்க நினைக்கும் காளைகளை விட மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
|
உச்ச நீதிமன்றம்
அப்பாவி விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஆதரிக்கும் மக்கள் தான் உண்மையான விலங்குகள் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
|
காளைகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொருவரையும் ஆயிரம் காளைகளை விட்டு துரத்த விட வேண்டும். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் என்று பார்ப்போம்?
-
Actor Vishal: இவன்லாம் என்ன டைரக்ஷன் பண்ணி கிழிக்கப்போறான்னு நினைக்கிறாங்க.. விஷால் வருத்தம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்
-
ஷங்கர் மகள் 2வது திருமணம்.. சங்கீதா விஜய் மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷும் கலந்திருக்கிறாரே!