Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கபாலிக்கு அடுத்து சூர்யாவை இயக்கும் ரஞ்சித்!
இரண்டே படங்களில் உச்சத்தைத் தொட்டுவிட்டார் ரஞ்சித். கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கியதன் மூலம் கோடம்பாக்கத்தின் ஆச்சர்யக்குறியாகிவிட்டார்.
இப்படத்தையடுத்து கார்த்தி, சூர்யாவை வைத்து ரஞ்சித் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘மெட்ராஸ்' படத்தில் ஏற்கனவே கார்த்தியுடன் பணியாற்றிய ரஞ்சித், அவரிடம் ஒருவரிக் கதை ஒன்றை கூறிவிட்டதாகவும் அதற்கு கார்த்தி சம்மதித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவிருந்த நேரத்தில்தான், ரஜினியிடமிருந்து ரஞ்சித்துக்கு அழைப்பு வர, அந்தப் படத்துக்காக விட்டுக் கொடுத்தது ஸ்டுடியோ கிரீன்.
இப்போது கபாலி முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு ஏற்ற கதை ஒன்றை ரஞ்சித் தயார் செய்திருக்கிறாராம்.
ஏற்கெனவே சொன்ன கதையில் கார்த்தியையோ அல்லது புதிய கதையில் சூர்யாவையோ அவர் இயக்குவார் என்கிறார்கள். இருவரில் யார் நடித்தாலும், அதை ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கப் போகிறது.