Don't Miss!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரூ 300 கோடி மோசடி.. எஸ்எஸ்ஆர் மகள் புகார்... ரியல் எஸ்டேட் உரிமையாளர் - மகன் கைது
சென்னை: ரூ 300 கோடி ரியல் எஸ்டேட் மோசடி குறித்து நடிகர் எஸ்எஸ்ஆர் மகள் புகாரின் பேரில் பிரபல கட்டுமான அதிபர் மகன் கைது செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் வீடுகளை கட்டித் தருவதாக விளம்பரம் செய்து அதற்கான வீட்டுக் கடன் தொகையையும் தனியார் நிறுவனத்திடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர் பத்மநாபன் மற்றும் அவர் மகன் கடந்த 2013-ம் ஆண்டு ஏராளமானோரிடம் பணம் வசூலித்தனர்.
பணம் செலுத்தியவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுச் சாவியை அவர்கள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், யாருக்கும் சாவியைக் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் கட்டியவர்கள் வீடு கட்டப்படுவதாக கூறிய கிராமத்திற்கு சென்று பார்த்ததனர். அங்கு காலி மனையாக இடம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் விசாரித்தபோது, ‘மனையிடத்தில் கட்டுமான அனுமதி பெறாமல் உள்ளது, பொது மக்கள் யாரும் வாங்க வேண்டாம்‘ என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது தெரிந்தது.
மேலும், கட்டப்படாத வீடுகளை கட்டியதாக தனியார் நிறுவனத்திடம் போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெற்றுள்ளதும் தெரிந்தது.
இதனால் பணம் கட்டி ஏமாந்த 25-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சாம்சனிடம் புகார் கொடுத்தனர். நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமியும் கட்டுமான நிறுவன அதிபர் பத்மநாபன், அவரது மகன் தமிழ் மீது நில மோசடி செய்ததாக புகார் மனு கொடுத்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உதயசங்கர், இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கட்டுமான நிறுவனம் நுங்கம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வீடு கட்டி தருவதாக 320 நபர்களிடம் ரூ.300 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கட்டுமான நிறுவன நிர்வாகிகள் பத்மநாபன், அவரது மகன் தமிழ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.