Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கபாலியின் மனைவி ‘குமுதவள்ளியாக’ ராதிகா ஆப்தே மாறிய கதை தெரியுமா?
சென்னை: கபாலி படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்ததற்காக காரணம் குறித்து மனம் திறந்துள்ளார் அப்பட இயக்குநர் ரஞ்சித்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
படத்தில் அவரது கதாபாத்திரத்தின் அமைப்பும், அவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
ரஞ்சித் பேட்டி...
இந்நிலையில், குமுதவள்ளி கதாபாத்திரத்திற்கு ராதிகா ஆப்தே தான் பொருத்தமாக இருப்பார் என தான் எவ்வாறு முடிவெடுத்தேன் என்பது குறித்து அப்பட இயக்குநர் ரஞ்சித் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ரத்தசரித்திரம் காட்சி...
அதில் அவர், "ரத்த சரித்திரம் படத்தில் ஒரு காட்சியில் சிவப்பு நிற புடவையில், நெற்றியில் பொட்டு வைத்து அவ்வளவு அழகாக ராதிகா ஆப்தே நடித்திருப்பார். கபாலியில் குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தைப் படைத்தவுடன் எனக்கு அந்த காட்சி தான் நினைவில் வந்து சென்றது.
ராதிகா ஆப்தே...
ஆனபோதும், ராதிகா ஆப்தே தவிர இன்னொரு நடிகையின் பெயரும் ரஜினியின் ஜோடியாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால், பிறகு ராதிகா ஆப்தேவையே இறுதி செய்து விட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை நாயகி...
ஆபாச செல்பி, அனுராக் காஷ்யப் குறும்படத்தில் ஆபாசக் காட்சி என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர் ராதிகா ஆப்தே. ஆனால், அந்த சர்ச்சைகள் முடிவடையும் முன்னரே ரஜினியின் நாயகியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமானவர்...
அதுமட்டுமின்றி திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிகைகள் சினிமாவில் நாயகிகளாக நடிப்பது அரிதிலும் அரிது. ஆனால், அதிலும் விதிவிலக்காக திருமணமான போதும் தொடர்ந்து தனது திறமையான நடிப்பால், குறும்படங்கள் மற்றும் சினிமாவில் நாயகியாக நடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வருகிறார் ராதிகா ஆப்தே.