Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அ..ஆ.. இ.. ஈ... ரித்திகா சிங்கின் 'தமிழ்' வாத்தியாராக மாறிய விஜய் சேதுபதி!
சென்னை: தமிழ் கற்றுக் கொள்வது எப்படி என விஜய் சேதுபதி தனக்கு டிப்ஸ் வழங்கியதாக நடிகை ரித்திகா சிங் கூறியிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்துக்குப்பின் ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியைப் பார்த்து தன் மிகவும் பயந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''விஜய் சேதுபதி மிகவும் அமைதியாக இருந்ததால் ஆரம்பத்தில் பயந்தேன்.
ஆனால் போகபோக அவரின் கலகலப்பான குணம் குறித்துத் தெரிந்து கொண்டேன்.தமிழ் கற்றுக் கொள்வது குறித்து எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதுபோல சப்-டைட்டில் இல்லாத தமிழ்ப்படங்களை பார்த்து தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.தற்போது நான் வேகமாக தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஆண்டவன் கட்டளை படத்துக்குப்பின் மீண்டும் ஒரு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.