Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வெட்கம், மானம், சூடு, சொரணை இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டாங்க: ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விழா ஒன்றில் தமிழக அரசியல் குறித்து அவர் காமெடியாக பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது,
காமெடி
கடைசி இரண்டு, 3 மாசத்துல நிறைய விஷயம் பார்த்துட்டோம். இங்க வந்தால் 15 நிமிடம் காமெடியாக பேசுமாறு கூறினார்கள். இப்ப காமெடி வேண்டுமானால் தந்தி டிவி, புதிய தலைமுறை டிவி தான் பார்க்கணும்.
வளர்மதி
ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். இன்று அதே எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்தால் மரியாதை அளிப்பார்கள். இங்கு வளர்மதி வந்தால், வளர்மதியே வருக, வளமான தமிழகம் தருக என்பார்கள். யாரை நாம் ஆதரிக்கணும்.
அரசியல்
அரசியல் என்பது ஆசை இல்லை அது அழிவு. நான் இளைஞர்களை அரசியலுக்கு வர தூண்டுவதாக கூறுகிறார்கள். நான் யாரையும் அசிங்கமா பண்ண தூண்டிவிடலை.
வெட்கம்
வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம். அதனால் அரசியலுக்கு வருவது இல்லை.
|
எம்.எல்.ஏ.க்கள்
இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டுது அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது. இது போன்று 11 நிமிடம் பேசியுள்ளார் பாலாஜி.