Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யார்யா இந்த புது வில்லன்... இப்படி மிரட்டராரு!
சென்னை: பாலாவால் தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்ட ஆர் கே சுரேஷ், இப்போது மருது படத்தின் மூலம் கோலிவுட்டில் பேசப்படும் நட்சத்திரமாகியிருக்கிறார்.
இவர் இதற்கு முன் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர் (ஸ்டுடியோ 9).
ஆனால் இவரது நோக்கமெல்லாம் நல்ல நடிகனாக வேண்டும் என்பதுதானாம். அதனால் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வில்லன் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார்.
மருது படத்தில் தனது கேரக்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போன சுரேஷ், "எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு நெகிழ வைக்கிறது. இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்ததில்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசியும்தான் காரணம் என்பேன்.
நான் ஒரு இயக்குநரின் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு வாழ் நாள் முழுக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்,' என்கிறார் தன முறுக்கு மீசையை தடவியபடி!