Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ராயல்டியை திருடுகிறார்கள்.. ஜி.வி.பிரகாஷ் குற்றச்சாட்டு
'சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்" என்று எனது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்.
சில ஆடியோ கம்பெனிகள் ராயல்டி விவகாரத்தில் இசை அமைப்பாளர்களை ஏமாற்றுகின்றனர். என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.
திருடும் ஆடியோ நிறுவனங்கள்
‘'சில ஆடியோ நிறுவனங்கள் இசை அமைப்பாளர்களிடமிருந்தும், பாடல் ஆசிரியர்களிடமிருந்தும் ராயல்டியை திருடுகின்றனர்.
அடிப்படை உரிமை
ராயல்டி என்பது ஒரு படைப்பாளையின் அடிப்படை உரிமை. அதை திருடுவது நாகரீகமற்ற செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும்
ஜி.வி.பிரகாஷ் கருத்துக்கு ஆதரவு
ஜி.வி.பிரகாஷ் குமாரின் குற்றச்சாட்டு பெரும்பாலான இளம் இசை அமைப்பாளர்கள் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். மூத்த பாடலாசிரியர்களான நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை போன்றோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாடலாசிரியர்கள் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.
மதன் கார்க்கி, வெங்கட் பிரபு
நன்றி ஜி.வி. பிரகாஷ், இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் வெங்கட்பிரபுவும், ஜி.வி.பிரகாஷ்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.
இசை அமைப்பாளர் ஆர்.ஹெச். விக்ரம்
இது போராடுவதற்கான சரியான நேரம். ஜி.வி.பிரகாஷ் கருத்தை இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்கள் முதல்பக்கத்தில் வெளியிட்டு ஆதரவு கூறியுள்ளன நன்றி என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
டி.இமான் பாராட்டு
இளம் இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து
கண்டிப்பாக நாமும் ராயல்டியில் இருந்து பங்கு பெறவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!