Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மக்கள்கிட்ட டப்பு லேது... சூர்யாவின் எஸ் 3 மீண்டும் தள்ளிப் போனது!
பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பு காரணமாக கையில் காசின்றி மக்கள் தவித்து வருவதால், கடந்த ஒரு மாதமாக பல படங்கள் தள்ளிப் போய் விட்டன. மீறி வெளியான படங்களும் போதிய வசூலின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
பணத் தட்டுப்பாட்டால் தள்ளிப் போன படங்களின் வரிசையில் இப்போது சூர்யாவின் சிங்கம் 3-ம் இணைந்துள்ளது.
இந்தப் படம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் இறுதி வாரம் வெளியாகும் என்றார்கள். ஆனால் மோடியின் இந்த பண ஒழிப்புக் காரணமாக டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஆனால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்னும் தீராததால் 'எஸ்3' வெளியீடு டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது எஸ் 3.