Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கண்ணு பட்டுடும்ல: ஹீரோவை திட்டிய நடிகை
மும்பை: மகன் தைமூர் அலி கானின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக நடிகை கரீனா கபூர் கோபம் அடைந்தார் என பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சயிப் தைமூரின் புகைப்படத்தை தனது வாட்ஸ்ஆப் டிபியாக வைக்க அது அனைவருக்கும் கிடைத்துவிட்டது. இது குறித்து சயிப் கூறுகையில்,
கரீனா
தைமூரின் புகைப்படம் வெளியானதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் கரீனாவுக்கு தான் பிடிக்கவில்லை. மகனின் புகைப்படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று கோபப்ட்டார்.
தைமூர்
குழந்தையின் புகைப்படம் வெளியானால் அதை பார்த்து கண் பட்டுவிடும் என்று கரீனா கூறினார். கண் பட்டிருந்தால் இந்நேரம் கரீனா மருத்துவமனையில் அல்லவா இருந்திருக்க வேண்டும்.
கண்
குழந்தைக்கு கண் படுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் யாருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்யவில்லை. வாட்ஸ்ஆப் டிபியாக போட அது அப்படியே பரவிவிட்டது. பரவாயில்லை.
மகன்
தைமூரை மறைத்து மறைத்து வளர்க்க விரும்பவில்லை. தைமூர் ஏற்கனவே பிரபலமாகிவிட்டார். தலைக்கனம் இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என தைமூருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என சயிப் தெரிவித்துள்ளார்.