Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக... கிட்னா படத்தை 2 விதமாக எடுக்கும் சமுத்திரகனி!
சென்னை: தனது புதிய படமான கிட்னாவை இரண்டு விதமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி.
நிமிர்ந்து நில் படத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்னா என்ற படத்தை எடுக்க உள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தின் அனைத்து மொழிகளிலும் நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார்.
தெலுங்கு, கன்னட படங்களில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறாராம் சமுத்திரக்கனி. அதாவது, இப்படத்தை அவர் இரண்டு விதமாக எடுக்கவிருக்கிறாராம்.
முதன்முறையாக...
ஒரே சினிமாவை இரண்டு விதமாக எடுப்பது தமிழ் சினிமாவில் இது தான் முதன்முறை எனக் கூறப்படுகிறது.
இரண்டு வகைகளில்...
அதன்படி, இப்படத்தை இரண்டே கால் மணி நேரம் ஓடக்கூடிய படமாகவும், 3 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படமாகவும் என இரு விதத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் சமுத்திரக்கனி.
கேன்ஸ்...
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு 3 மணி நேரம் ஓடக்ககூடய படத்தை அனுப்ப திட்டமிட்டு அவர் இவ்வாறு இரு விதமாக படத்தை எடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரு விதமான படத்தையும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் ரிலீஸ் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
க்ளைமாக்ஸ் ஒன்று தான்...
இரண்டு விதமாக எடுக்கப்படும் இப்படத்தின் கதையும், இறுதிக்காட்சியும் ஒன்று தானாம். அது எடுக்கப்பட்ட விதம் தான் வேறுமாதிரியாக இருக்குமாம்.
ரசிகர்களுக்காக...
பொதுவான ரசிகர்களுக்காக ஒரு விதமாகவும், 3 மணி நேரம் செலவிட்டு திரைப்படம் பார்க்கும் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இன்னொரு விதமாகவும் இப்படம் எடுக்கப் பட உள்ளதாம்.
ரிலீஸ்...
பொதுவான ரசிகர்கள் ரசிக்கக்கூடிய படத்தை மூன்றில் இரண்டு பங்கு சென்டர்களிலும், சினிமா விரும்பிகளுக்கான படத்தை ஒரு பங்கு சென்டர்களிலும் வெளியிட முடிவு செய்யப் பட்டுள்ளது.
உதாரணத்திற்கு...
உதாரணத்திற்கு, 150 சென்டர்களில் படத்தை வெளியிடுகிறோம் என்று வைத்துக் கொண்டால், முதல் பகுதியை 100 சென்டர்களிலும், இரண்டாம் பகுதியை 50 சென்டர்களிலும் வெளியிடுவோம் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.