Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை
சென்னை: சண்டி வீரன் திரைப்படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் வழங்கப்படும் ஒரு தண்டனையைப் பற்றி படத்தில் விமர்சனம் செய்யப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
களவாணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம், இயக்கியுள்ள படம் 'சண்டி வீரன்'. இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக 'கயல்' ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.இன்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
சிங்கப்பூரில் வேலைக்காக சென்ற இளைஞன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகிறான். அப்போது அவனுக்கு ஏற்படும் சில பிரச்சினைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை என்று சற்குணம் கூறியுள்ளார்.
இந்தப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையைப் பற்றி இந்தப்படம் விமர்சனம் செய்யப்படுவதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படத்திற்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இயக்குநர் சற்குணம் கருத்து தெரிவித்துள்ளார்.