Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்ஃபியின் ஆபத்தை விளக்கும் சண்டிக்குதிரை!
செல்ஃபியின் ஆபத்தை விளக்கும் வகையில் ஒரு புதிய படம் உருவாகிறது. படத்துக்கு சண்டிக்குதிரை என்று தலைப்பிட்டுள்ளனர்.
சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
சின்னத்திரையில் பிரபலமான இவர் இப்போது பெரிய திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே அவர் மேல்நாட்டு மருமகன் என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.
பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் - வாரஸ்ரீ.. இவர் இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 'நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...' என்று எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய பக்திப் பாடல் இவர் எழுதியதுதான். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குநராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
சண்டிக்குதிரை குறித்து அவர் கூறுகையில், "விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம். செல்பி என்கிற வியாதியின் கருப்புப் பக்கங்களை மிக நுணுக்கமான திரைக்கதை மூலம் உணர்த்தி உள்ளோம். புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
காமெடி கலந்த திகில் படமாக சண்டிக்குதிரை உருவாகி உள்ளது," என்றார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!