Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உதயநிதிக்காக கதை ரெடி... கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் நடிகர் சந்தானம்!
சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதிக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளாராம் காமெடி நடிகர் சந்தானம். உதயநிதியின் கால்ஷீட் கிடைத்ததும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக சந்தானம் அறிவிப்பாராம்.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலிருந்தே அவருடன் இணைந்து நடித்து வருகிறார் சந்தானம். இருவரும் சேர்ந்து அடிக்கும் காமெடி லூட்டிகளுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஜெகதீஷ் இயக்கத்தில் நண்பேண்டா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், அவர் நடிகர் சந்தானம் தனக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்து விட்டு, சந்தானத்திடம் கதை கேட்பதாக உறுதி அளித்துள்ளாராம் உதயநிதி.
உதயநிதியின் அடுத்தபடமான இதயம் முரளியில் சந்தானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.