Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 3 பேரையும் நீக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் மோதல், தள்ளுமுள்ளு பரபரப்புடன் நடைபெற்றது. நடிகர்சங்க பொதுக்குழு கூட்டத்தில் மூத்த நடிகர்களின் பெயரில் நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. வெண்ணிற ஆடை மூர்த்தி, விணுசக்கரவர்த்தி, சரோஜாதேவி உள்ளிட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்களின் விவர பட்டியல் தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகர் சங்கத்தில் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறோம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் கூறியது.
நடிகர் சங்க விவகாரத்தில் என்னை, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கியதாக பத்திரிகையில் வந்த செய்தியைத்தான் தெரிந்துகொண்டேன். முறைப்படி நீக்கியதற்கான எந்தக் கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை. விளக்கம் கேட்டும் எந்தக் கடிதமும் அனுப்பப்படவில்லை என்று சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலந்து கொள்ள அனுமதி கோரியும் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். 3 பேரையும் நீக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகரும் சங்க பொதுச்செயலாளருமான விஷால் கூறியுள்ளார்.