Don't Miss!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொடங்கியது சரத்குமாரின் 'ரெண்டாவது ஆட்டம்'!
இளம் டீமோடு கை கோர்க்கிறார் சரத்குமார். அந்தப் படத்துக்கு சென்டிமெண்டாக ரெண்டாவது ஆட்டம் என்று தலைப்பிட்டுள்ளார்கள்.
சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரை சவாரி செய்து கொண்டிருக்கும் சரத்துக்கு, சினிமாவில் அடுத்த ரவுண்டு தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இப்படி தலைப்பிட்டுள்ளார்கள் போலிருக்கிறது.
இந்தப் படத்தை பிரித்வி ஆதித்யா என்ற இளம் இயக்குநர்தான் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், "இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்தப் படத்தின் மெய்ன் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியானவர் சரத்குமார்தான் என்று, இந்தக் கதையைக் கேட்ட என் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருமே கூறினர். அவருக்கு அத்தனைப் பொருத்தமாக அமைந்துவிட்ட வேடம் இது.
காவல் துறை அதிகாரி வேடத்தில் சரத் நடிக்கிறார். நடுத்தர வயது கொண்ட நாயகர்களின் படங்கள் இப்போது மக்களால் ரசிக்கப்படுகின்றன. அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும்.
அதோடு சரத்குமாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும்," என்றார்.