Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி கதைத் திருட்டு என்று யாரைவது பிரச்சினை செய்தால்.... - சரத்குமார் எச்சரிக்கை
சென்னை: இனி கதைத் திருட்டு என்று பிரச்சினை செய்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்'. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி', விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்' படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது.
‘சண்டமாருதம்' படத்தில் பாடல்களை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.
விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசும்போது, ‘‘தமிழ் பட உலகில் இப்போதெல்லாம் கதைத் திருட்டு என்று அடிக்கடி பிரச்சினை செய்கிறார்கள். என் படத்தில் அம்மா-அப்பா என்று 2 கதாபாத்திரங்கள் வைத்திருந்தேன். அதேபோல் இன்னொரு படத்திலும் அம்மா-அப்பா கதாபாத்திரங்கள் உள்ளன. எனவே என் கதை திருடப்பட்டுள்ளது என்று புகார் செய்கிறார்கள், வழக்கு தொடருகிறார்கள். இதை இனியும் அனுமதிக்க முடியாது,'', என்றார்.
சரத்குமார்
இதைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசுகையில், "சமீப காலமாக கதை திருட்டு என்று அடிக்கடி புகார்கள் வருவதாக ராதாரவி குறிப்பிட்டார். இனிமேல் அப்படி பிரச்சினை செய்தால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்பட ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒன்று திரண்டு போராடும்.
ரசிகர்கள் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்க வேண்டாம். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
சமீபத்தில் வெளியான கத்தி, லிங்கா போன்றவை கதைத் திருட்டுப் புகார்களுக்கு உள்ளாகின.