Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எங்கள் மகளுடன் போனில் கூட பேசவிடுவது இல்லை கார்த்தி: நடிகை சாட்னாவின் தாய் குமுறல்
சென்னை: தயாரிப்பாளர் கார்த்தி தனது மகளை மூளை சலவை செய்து ஏமாற்றி தங்களிடம் இருந்து பிரித்துவிட்டதாக நடிகை சாட்னா டைட்டஸின் தாய் மாயா புகார் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த பிச்சைக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் கேரளாவை சேர்ந்த சாட்னா டைட்டஸ். பிச்சைக்காரன் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் கார்த்தியும், சாட்னாவும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சாட்னாவின் தாய் மாயா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சாட்னா
என் கணவர் டைட்டஸ் கேரளாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். எங்கள் மகள் சாட்னா +2 படித்துக் கொண்டிருக்கிறார். படித்துக் கொண்டே அவர் சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
கார்த்தி
நீ நடிக்காதே, நான் உன்னை பெரிய தயாரிப்பாளர் ஆக்குகிறேன். நாம் லண்டனில் செட்டில் ஆகிவிடலாம் என்று பட வினியோகஸ்தர் கார்த்தி என் மகளுக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.
நடிப்பு
திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என கார்த்தி எங்கள் மகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் சாட்னா தான் நடிக்கவிருந்த சில படங்களுக்காக வாங்கியிருந்த முன்பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பேச முடியவில்லை
எங்கள் மகளுடன் செல்போனில் கூட பேச முடியவில்லை. கார்த்தி சாட்னாவை பதிவுத் திருமணம் எல்லாம் செய்யவில்லை. அவர் சாட்னாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். சாட்னாவை மீட்கக் கோரி நடிகர் சங்கத்திடம் புகார் அளிக்க உள்ளேன்.