Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சத்யராஜ் பேச்சுக்கும் பாகுபலிக்கும் தொடர்பு இல்லை: ராஜமவுலி சரண்டர்
பெங்களூர்: சத்யராஜ் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து அதற்காக பாகுபலி 2 படம் பாதிக்கப்படக் கூடாது என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியாக விட மாட்டோம் என கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ராணுவமே வந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாகுபலி 2 இயக்குனர் ராஜமவுலி கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சத்யராஜ்
சத்யராஜ் பாகுபலி படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல. அவர் அந்த படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸாகாவிட்டால் அவருக்கு எந்தவித நஷ்டமும் இல்லை.
பாகுபலி
பாகுபலி பட வெளியீட்டை தடுத்தால் அதனால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கானவர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சத்யராஜின் தனிப்பட்ட கருத்திற்காக படத்தை எதிர்ப்பது சரி அல்ல.
சொல்லியாச்சு
இது குறித்து சத்யராஜிடம் நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். ஆனால் இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய முடியாது. படத்திற்கும், சத்யராஜின் தனிப்பட்ட கருத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
வேண்டாம்
ஒருவர் பேசிய பேச்சிற்காக அத்துடன் படத்தை தொடர்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ராஜமவுலி.