Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செல்வராகவன் கதையை இயக்கும் மனைவி கீதாஞ்சலி
செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' கதையினை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தற்போது இயக்கி வருகிறார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தின் வெளியான படம் 'இரண்டாம் உலகம்'. அப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவரது அழகான கதையினை அவரது மனைவி இயக்கிவருகிறார்.
கணவரிடம் உதவி இயக்குநர்
செல்வராகவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கீதாஞ்சலி செல்வராகவன். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் 'மாலை நேரத்து மயக்கம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மாலை நேரத்து மயக்கம்
அதே சமயம் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கணவருக்கு நன்றி
தான் இயக்குநரானது குறித்து கீதாஞ்சலி செல்வராகவன், "செல்வராகவன் கொடுத்த அழகான கதைக்கு இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகளுடன் செல்வா
நான் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால், அவர் சிறிது காலத்திற்கு குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறார்.
ஒரு ரசிகையின் கோரிக்கை
மனைவியாக இல்லாமல் ஒரு ரசிகையாக, செல்வராகவன் தனது மனநிலையை மாற்றி விரைவில் அதிரடியாக படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!