Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் உயிரிழந்த பாடகி ஷான் ஜான்சனின் மரணம் இயற்கையே: பிரேத பரிசோதனை அறிக்கை
சென்னை: இளம் பாடகி ஷான் ஜான்சன் மாரடைப்பால் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக இருந்து மறைந்த ஜான்சன் மாஸ்டரின் மகள் ஷான் ஜான்சன்(29). தந்தையின் வழியில் இசை மீது ஆர்வம் கொண்டவர். அவர் படங்களில் பாடல்கள் பாடி வந்தார்.
சென்னை கோடம்பாகத்தில் தங்கி பாடல்கள் பாடி வந்தார். பாடுவது தவிர அவரே பாடலும் எழுதி வந்தார்.
திருமணம்
ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்ற ஷானுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக அவரும், அவரது தாய் ராணியும்(55) நேற்று முன்தினம் கொச்சிக்கு செல்வதாக இருந்தது.
மரணம்
திருமணத்திற்காக கொச்சிக்கு செல்லும் முன்பு கடந்த 5ம் தேதி ஷான் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கும் என்று கருதப்பட்டது.
திடீர் என
வியாழக்கிழமை இரவு பாட்டு பாடிவிட்டு வீட்டிற்கு வந்த அவர் வெள்ளிக்கிழமையும் ஸ்டுடியோவுக்கு சென்று பாட வேண்டி இருந்த நிலையில் இறந்து கிடந்தார்.
மாரடைப்பு
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷானின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
இறுதிச் சடங்கு
பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் ஷானின் உடல் நேற்று மதியம் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.