Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மனோகருடு இசை வெளியீட்டு விழாவில் நிறைவேறாத ஆசையை தெரிவித்த ஷங்கர்
ஹைதராபாத்: விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கப் போவதாக மனோகருடு அதாவது ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஐ படம் தெலுங்கில் மனோகருடு என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மனோகருடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழை போன்றே பிரமாண்டமாக நடத்த ஷங்கர் திட்டமிட்டார்.
மனோகருடு விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் அல்லது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டலோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
இசை வெளியீடு
மனோகருடு இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் மிகவும் எளிமையாக நடந்தது. விழாவுக்கு ஜாக்கி சானோ, ஸ்டலோனோ வரவில்லை.
ராஜமவுலி
இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு இயக்குனர்களான ராஜமவுலி, த்ரிவிக்ரம் சீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹீரோ விக்ரமும் கலந்து கொண்டார்.
காதலன்
ஷங்கரின் காதலன் படம் ரிலீஸானபோது நான் உதவி இயக்குனராக இருந்தேன். அந்த படத்தில் முக்காலா பாடலில் கண்ணுக்கு தெரியாத பிரபுதேவாவை எப்படி படமாக்கினார் என்று வியந்தோம். தற்போது நான் முன்னணி இயக்குனராக உள்ளேன். இந்நிலையில் ஐ படத்தின் ட்ரெய்லரை பார்த்து ஷங்கர் ஒவ்வொரு ஃபிரேமையும் எப்படி படமாக்கினார் என்று வியக்கிறேன் என்றார் ராஜமவுலி.
பாகுபலி
ராஜமவுலியின் மகதீரா படத்தை பார்த்து அவரது ரசிகன் ஆனேன். அவரின் நான் ஈ படத்தை பார்த்த பிறகு அவரை மேலும் பிடித்துவிட்டது. அவர் இயக்கி வரும் பாகுபலி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார் ஷங்கர்.
தெலுங்கு படம்
நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் ஆசை வெகுகாலமாக உள்ளது. ஆனால் அந்த ஆசை சில காரணங்களால் நிறைவேறாமல் உள்ளது. விரைவில் நான் தெலுங்கு படம் ஒன்றை இயக்குவேன் என்று ஷங்கர் தெரிவித்தார்.