Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் பிரியாணி சமைச்சுப் போடறேன், வந்து சாப்பிடுங்க.. அஜீத்துக்கு ஷோபா சந்திரசேகரன் அழைப்பு
சென்னை: தனது கையால் சமைத்த பிரியாணியை அஜீத் சாப்பிட வேண்டும் என விரும்புவதாக, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1 ம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் தினத்தை அன்னதானம், ரத்ததானம், ஸ்பெஷல் ஷோ என்று அவரது ரசிகர்கள் போட்டிபோட்டு கொண்டாடினர்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தித் திரையுலகிலிருந்து ஏராளமான நடிக, நடிகையர் அஜீத்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஷோபா சந்திரசேகர் வாழ்த்தில் "நீங்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்.
சண்டைக்காட்சிகள் அடிபட்டு நீங்கள் சிகிச்சை எடுப்பதைப் பார்க்கும்போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் நீங்கள் ஒரு நாள் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து, எனது கையால் சமைத்த பிரியாணியை சாப்பிட வேண்டும்'' என அஜீத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அம்மாவாக ஷோபா சந்திரசேகர் வைத்த கோரிக்கையை மகனாக அஜீத் நிறைவேற்றுவாரா? பார்க்கலாம்.