Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்வேன்: கதறி அழுத சபீதா ராய்- வீடியோ இதோ
சென்னை: இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன் என நடிகை சபீதா ராய் தெரிவித்துள்ளார்.
வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் அந்த தொடரை ஒளிபரப்பும் நிறுவன மேலாளர் சுகுமாறனுடன் நள்ளிரவில் சண்டை போட்ட வீடியோ வெளியானது. சபீதா சுகுமாறனுடன் அவர் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்ததாக செய்தி வெளியானது.
இந்நிலையில் இது குறித்து அவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதில் சில,
சம்பவம்
அனைவருக்கும் வணக்கம். இதுவரைக்கும் நடந்த சம்பவத்தை பற்றியோ இல்லை அதை பற்றிய விளக்கங்கள் பற்றியோ எதை பற்றியும் நான் பேச வரவில்லை.
தெரியும்
நடந்த விஷயம் என்னவென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த சம்பவத்தை அடுத்து நீ ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய எந்த சமூக வலைதளத்திற்கும் நீ போகக் கூடாது என்றார்கள் என் அம்மா.
அம்மா
ஏன் அம்மா அப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு போகக் கூடாது என்றால் போகக் கூடாது தான். நான் சமூக வலைதளத்திற்கு போகவில்லை என்றால் நடந்த சம்பவம் உண்மை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நடிகை
இது ஒரு சாதாரண பொண்ணுக்கு நடந்திருந்தால் யாரும் நியூஸ் போட்டிருக்க மாட்டாங்க. நான் ஒரு நடிகை என்பதால் நியூஸ் வந்துடுச்சு. என் அம்மாவுக்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் லைவில் வந்துள்ளேன்.
மானமுள்ள பெண்
ஒரு மானமுள்ள எந்த பெண்ணாக இருந்தாலும் அந்த செய்தி வெளியான அன்றே தற்கொலை செய்து செத்திருப்பாள். நீ ஏன் இன்னும் சாகலை என்று கேட்கிறீங்களா, சொல்கிறேன்.
குழந்தை
63 வயதில் அம்மா என்கிற குழந்தை என்னை நம்பி இருக்கிறார்கள். அவர்களை பார்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளேன். போடுற நியூஸுக்காக நான் செத்துவிட்டால் என் அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் இல்லை. அதனால் நான் சாகவில்லை. தற்கொலைக்கு எதிரானவள் நான்.
வீடியோ
அந்த வீடியோவில் பார்த்தது நான் தான், சண்டை போட்டது நான் தான், அது நான் தான், அந்த வாய்ஸ் என்னுடையது தான். அந்த வீடியோவை சித்தரித்து போட்டுள்ள நியூஸ் நியாயமா, உண்மை சம்பவமாக தெரியுதா?
ஆதாரம்
இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன்.
வருங்கால கணவர்
என் வருங்கால கணவர் வெளிநாட்டில் உள்ளார். அவர் என்னை நம்புகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தார் நம்புவாங்களா? ஒரேயொரு சேனல் தான் செய்தி போட்டுள்ளது. அதை தான் நான் சொல்கிறேன்.
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் அந்த வீடியோவை எத்தனை பேர் ஷேர் செய்தீர்கள். அதன் உண்மையை தெரிஞ்சிருக்கலாமே. இப்ப இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க. சேனல் ஒன்று, இரண்டு நாள் போட்டுட்டு நிப்பாட்டிட்டான். ஆனால் சமூக வலைதளத்தில் வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!