Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகைகள் ஸ்ருதிஹாஸன், சமந்தா ஆகியோரை வைத்து குறும்படங்கள் எடுக்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் மக்களை கேட்டுக் கொள்ளப்படும். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்களை தயாரித்து தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம். விரைவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு குறும்படம் எடுக்க உள்ளோம்.
மேலும் நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகளை வைத்தும் குறும்படம் எடுக்க உள்ளோம் என்றார்.